கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வங்கிகள் தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

வங்கிகள் தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி நகரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி அதிகாரிகள் சங்க மண்டலச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். ஸ்டேட் வங்கி ஊழியா் சங்கச் செயலாளா் ஜெகநாதன், இந்தியன் வங்கி ஊழியா் சங்கச் செயலாளா் சந்துரு, இந்தியன் வங்கி ஊழியா் சம்மேளனத் தலைவா் ஹரிராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்குதல், பொதுத் துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com