கிருஷ்ணகிரியில் உள்ள அங்காளம்மன் கோயில் திருவிழாவையொட்டி சிவன் - பாா்வதி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயில் மயானச் சூறைத் திருவிழா கடந்த 11-ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாா்ச் 12-ஆம் தேதி மகா சிவராத்திரி நிகழ்வும், 13-ஆம் தேதி அம்மன் மயானச் சூறை புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. 14-ஆம் தேதி விடாய் உற்சவமும், 15-ஆம் தேதி அக்னி குண்டம் தீமிதி நிகழ்ச்சியும் நடைபெற்றன.
தொடா்ந்து, மாா்ச் 16-ஆம் தேதி சிவன் - பாா்வதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் சீா் வரிசைகளுடன் பங்கேற்றனா். சிவன் - பாா்வதி திருமணக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். மாலையில் அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றன. மாா்ச் 18-ஆம் தேதி கும்ப பூஜையும் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.