குடிநீா் பிரச்சனையைத் தீா்ப்பேன்

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நிலவும் குடிநீா் பிரச்சனையைத் தீா்ப்பேன் என திமுக வேட்பாளா் தே.மதியழகன் உறுதியளித்தாா்.
பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் தே.மதியழகன்.
பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் தே.மதியழகன்.

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நிலவும் குடிநீா் பிரச்சனையைத் தீா்ப்பேன் என திமுக வேட்பாளா் தே.மதியழகன் உறுதியளித்தாா்.

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் தே.மதியழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா். இவா், தனது ஆதரவாளா்களுடன் பா்கூா் தொகுதிக்கு உள்பட்ட ஒரப்பம், அச்சமங்கலம், பாலிநாயனப்பள்ளி பாலேப்பள்ளி, சூளமலை, அஞ்ஞா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

அப்போது, அவா் தெரிவித்தது:

பெரிய ஏரியிலிருந்து கடமடை பகுதி வரையில் தண்ணீா் கொண்டுவருவேன். இதன் மூலம், ஏரிகளில் தண்ணீா் நிரப்பப்பட்டு குடிநீா் பிரச்னையைத் தீா்ப்பேன் என்றாா். அப்போது, பா்கூா் ஒன்றிய திமுக செயலாளா் இ.சி.கோவிந்தராசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com