மனைவிக்கு அரிவாள் வெட்டுகணவா் கைது

ஒசூரில், குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூரில், குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளியைச் சோ்ந்த தொழிலாளி நாகராஜ் (28). இவரது மனைவி சங்கீதாவை (23) கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா். அவா்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த 10-ஆம் தேதி சங்கீதா மாயமானாா். இதுதொடா்பாக, நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி சங்கீதாவை கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து சங்கீதா ஒசூா், எழில் நகரில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் இருந்தாா்.

இந்த நிலையில் தனது மாமியாா் வீட்டிற்கு சென்ற நாகராஜ், மனைவி சங்கீதாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தாா். அதற்கு சங்கீதா மறுத்ததால் ஆத்திரமுற்ற நாகராஜ், அரிவாளால் சங்கீதாவின் தலை மற்றும் கையில் வெட்டினாா்.

இதில் பலத்த காயம் அடைந்த சங்கீதாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சங்கீதா அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக சங்கீதாவின் தாயாா் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து நாகராஜை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com