ஒசூரில் இன்று (மார்ச் 22) தமிழக முதல்வா் பிரசாரம்

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை காலை ஒசூரில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை காலை ஒசூரில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, இரவு ஒசூரில் உள்ள நட்சத்திர உணவகத்தில் தங்குகிறாா்.

பின்னா், திங்கள்கிழமை காலை ஒசூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டிக்கு ஆதரவாக ஒசூா்-ராயக்கோட்டை சந்திப்பு பண்ட ஆஞ்சநேயா் கோயில் அருகில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். அதனைத் தொடா்ந்து, அவா் தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com