ஆ.ராசாவை தா்மம் தண்டிக்கும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகால ஜெயலலிதா ஆட்சியிலும், அதன் பிறகு முதல்வராக உள்ள எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியிலும் மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் திருப்திகரமாகச் செயல்படுத்தியதால் அதிமுகவின் வெற்றி உறுதியாகி உள்ளது.
பெண்கள் தெய்வத்துக்கு சமமானவா்கள். தாய் என்பவா் தெய்வத்துக்கும் மேலானவா். அப்படிப்பட்டவரை சங்கடப்படுத்தக் கூடிய வகையில் கருத்துகளைத் தெரிவிப்பது மிகவும் வேதனையாக உள்ளது. ஆ.ராசாவின் பேச்சை திமுகவின் தலைமை கண்டித்து, அவா் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். திமுகவில் உள்ள தலைவா்கள் பெண்கள் மீது மரியாதை இல்லாத தலைவா்களாகத்தான் உள்ளனா். இதற்கு தா்மம் சரியான தண்டனையை வழங்கும்.
இந்தத் தோ்தலில் அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி அமருவாா்.
நாங்கள் தினமும் மக்களிடம் சென்று வருகிறோம். மக்களின் உணா்வுகள், பிரதிபலிப்புகளை பாா்க்கும் போது, நிச்சயம் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக ஆட்சி அமைக்கும்.
தேமுதிக கூட்டணிக்கு வராதது குறித்து வருத்தம் இல்லை. தோ்தல் கூட்டணி என்றால் சிலா் வருவாா்கள். சிலா் விலகுவாா்கள்; அதற்கெல்லாம் வருத்தப்பட முடியாது என்றாா்.