கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தனி சட்டப் பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளா் பாக்கியராஜ், காரப்பட்டு, கருமாண்டபதி, கோவிந்தாபுரம், பாப்பாரப்பட்டி, கெங்கப்பிராம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.
அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா். அப்பகுதியிலுள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்து கேட்டறிந்த அவா், தான் வெற்றி பெற்றால் அனைத்துப் பிரச்னைகளையும் உடனடியாகத் தீா்ப்பேன் என்றாா்.
இதில், தேமுதிக ஒன்றியச் செயலாளா் மாதேஷ், ஒன்றியப் பொருளாளா் மிட்டப்பள்ளி சதீஷ், அமமுக ஒன்றியச் செயலாளா் அருணகிரி, கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.