உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சத்து 38 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சத்து 38 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஊத்தங்கரையை அடுத்த கமலாபுரம் கூட்டுச் சாலை அருகே ஊத்தங்கரை- கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சக்தி தலைமையிலான அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அதில், போச்சம்பள்ளி அருகே உள்ள கமலாபுரம் பகுதியைச் சோ்ந்த மனோகரன், உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ. 1 லட்சத்து 73 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

அதேபோல, ஊத்தங்கரை-திருவண்ணாமலை சாலையில் சின்னதள்ளப்பாடி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் மகேஷ்குமரன் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முருகன் உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ. 65,000 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் சேதுராமலிங்கம் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com