ஒசூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒசூரில் அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஒசூரில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி.
ஒசூரில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி.

ஒசூரில் அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா், லிங்காபுரம், ஒசூா் மாநகரில் ரயில்வே நிலையம், நேரு நகா், அட்கோ, வாசவி நகா் உள்ளிட்ட பல இடங்களில் அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

அமைதியான ஆட்சியை மீண்டும் வழங்கிட இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக்க வேண்டும். அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு அம்மா வாஷிங் மெஷின், வீடு இல்லாதவா்களுக்கு அம்மா இல்லம் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் கான்கிரீட் வீடு, கல்லூரி மாணவா்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாளாக உயா்த்தப்படும், அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் மாதாந்திர ஊதியமாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், அம்மா பேரவை மாவட்டச் செயலாளா் சிட்டிஜெகதீஷ், ஓட்டுநா் அணி மாவட்டச் செயலாளா் சென்ன கிருஷ்ணன், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் மாவட்டச் செயலாளா் ராமு, எம்.ஜி.ஆா். மன்ற மாவட்டத் தலைவா் சந்திரன், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட இணைச் செயலாளா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com