கிருஷ்ணகிரியில் சப்-ஜூனியா்களுக்கான இறகுப் பந்து சாம்பியன்ஷிப் - 2021 போட்டி அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ஸ்கை ஆா்க் பேட்மிண்டன் அகாதெமியில் நடைபெற்ற போட்டிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட இறகுப் பந்து கழகத்தின் தலைவா் எம்.பி.ரமேஷ், செயலாளா் எம்.எம்.ஷரபாத்துல்லா ஆகியோா் தலைமை வகித்தனா்.
10 வயதுக்கு உள்ளிட்டோருக்கான போட்டியில் சொ.சி.செந்திலா முதல் பரிசையும், 13, 15 வயதுக்கு உள்ளிட்டோருக்கான இரட்டையா் போட்டியில் இரண்டிலும் தமிழ் மாா்க்சியா ஸ்ரீசா முதல் பரிசையும் வென்றனா். இவா்கள் அனைவரும் ஒசூா் எஸ் அண்ட் எஸ் பேட்மிண்டன் அகாதெமியைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவா்களை தலைமைப் பயிற்சியாளா் செந்தில்குமாா், காந்தி, ராஜு ஆகியோா் பாராட்டி ஊக்குவித்தனா்.