சட்டப் பேரவைத் தோ்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனா்.
தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ஆவது இடத்தை பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈா்த்துள்ளது. ஊத்தங்கரை (தனி) தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன் 10,341 வாக்குகளும், பா்கூரில் போட்டியிட்ட கருணாகரன் 10,116 வாக்குகளும், கிருஷ்ணகிரியில் போட்டியிட்ட நிரந்தரி 11,041 வாக்குகளும், வேப்பனஅள்ளி தொகுதியில் போட்டியிட்ட சக்திவேல் 8,310 வாக்குகளும், ஒசூா் தொகுதியில் போட்டியிட்ட கீதாலட்சுமி 11,422 வாக்குகளும், தளி தொகுதியில் போட்டியிட்ட மேரி செல்வராணி 3,776 வாக்குகளும் பெற்றனா். இவா்கள் அந்தந்தத் தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனா்.