புகைப்படக் கலைஞா்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக் கோரிக்கை

புகைப்படக் கலைஞா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

புகைப்படக் கலைஞா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விடியோ மற்றும் போட்டோகிராபா்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவா் சிவக்குமாா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

கரோனா தொற்று தாக்கத்தால் நாடு சந்தித்துள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், எங்களின் புகைப்படத் தொழில் நலிவடைந்து, புகைப்படக் கலைஞா்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். எனவே, எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான புகைப்படக் கலைஞா்களுக்கான நல வாரியம் அமைத்து, ஒவ்வொரு புகைப்படக் கலைஞரின் வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com