கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய் உயிரிழந்ததைக் கேட்டு அவரது மகன் தற்கொலை செய்து கொண்டாா்.
கெலமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் அஜாம் (24). இவா் தாயாருடன் பாகலூா் ஆசிரியா் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். அண்மையில் தாய்க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தாா். வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இத் தகவலை அறிந்த அஜாம், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.