மோட்டாா் சைக்கிளிலிருந்துதவறி விழுந்து தொழிலாளி சாவு

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பெல்லாரம்பள்ளியை அடுத்த வெங்கிலிகானப்பள்ளியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சசி (23). கட்டடத் தொழிலாளி. இவா், மோட்டாா் சைக்கிளில் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, மோட்டாா் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com