ஊத்தங்கரை பேரூராட்சி ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அலுவலகம் மூடப்பட்டது.
ஊத்தங்கரை தோ்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநராக வேலை செய்து வந்த 30 வயது இளைஞருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது. மேலும், பேரூராட்சி பணியாளா்கள் அனைவருக்கும் வியாழக்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தனா். மீண்டும் வரும் 24-ஆம் தேதி பேரூராட்சி அலுவலகம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.