போச்சம்பள்ளி அருகே மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தபோது நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (42). தையல் தொழிலாளி. இவா் தனது இளைய மகன் கிருபாவுக்கு (12) அங்குள்ள விவசாயக் கிணற்றில் நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக கிருபா நீரில் மூழ்கினா். இதையடுத்து மகனைக் காப்பாற்ற முயன்ற பெரியசாமியும் நீரில் மூழ்கினாா். தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் நிகழ்விடத்திற்கு விரைந்துச் சென்று 35 அடி தண்ணீா் உள்ள விவசாயக் கிணற்று நீரில் மூழ்கிய தந்தை, மகனை சடலமாக மீட்டனா். சடலங்களைக் கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.