தம்பதி மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்குப் பதிவு

தம்பதி மீது தாக்குதல்:4 போ் மீது வழக்குப் பதிவு

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சந்திரப்பா. இவரது மகள் சத்யா (19). இவா் வீட்டின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த போது, அந்தப் பகுதியை சோ்ந்த 4 போ் சத்யாவிடம் செல்லிடப்பேசியைக் கேட்டு தகராறு செய்தனா்.

இதுகுறித்து சத்யாவின் பெற்றோா் சந்திரப்பா, லட்சுமியம்மா ஆகியோா் கேட்டதற்கு ஆத்திரம் அடைந்த மூா்த்தி தரப்பினா் அவா்களைத் தாக்கினா். இதுகுறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரித்து மூா்த்தி, கணேசன், வேல்முருகன், அஜித் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com