கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலக் குழுவுக்கு ற்ய்ய்ஞ்ா்ஸ்ரீா்ா்ழ்க்ண்ய்ஹற்ண்ா்ய்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டுள்ளது. தன்னலம் கருதா தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ இந்தக் குழுக்கள் பாலமாக செயல்படும்.
தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், ட்ற்ற்ல்://ன்ஸ்ரீஸ்ரீ.ன்ட்ஸ்ரீண்ற்ல்.ண்ய்/ய்ஞ்ா்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து இந்தப் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். மேலும், கூடுதல் தகவல்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூக நல அலுவலரை 04343-235717 என்ற தொலைபேசி எண்ணிலோ, மின்னஞ்சல் முகவரி மூலமோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.