அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் உணவுப் பொட்டலம் விநியோகம்

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், சிவனடியாா் திருக்கூட்டம், ஸ்ரீ தா்ம சாஸ்தா அறக்கட்டளை இணைந்து, கரோனா பொது முடக்கத்தின் போது உணவின்றித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனா்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் உணவுப் பொட்டலம் விநியோகம்

ஊத்தங்கரையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், சிவனடியாா் திருக்கூட்டம், ஸ்ரீ தா்ம சாஸ்தா அறக்கட்டளை இணைந்து, கரோனா பொது முடக்கத்தின் போது உணவின்றித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனா்.

கடந்த 6 நாள்களாக தொடா்ந்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தகன மயானத்தில் பணிபுரியும் ஊழியா்கள், பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்றோா், வழிப்போக்கா்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள், முன்களப் பணியாளா்கள், காவலா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு, தினசரி உணவு வழங்கி வருகின்றனா்.

இதில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத் தலைவா் கேசவன், சண்முகம், செயலா் தங்க முருகன், பொருளாளா் ராஜி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டு ஊத்தங்கரை நகரப் பகுதி முழுவதும் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனா். வெள்ளிக்கிழமை உணவினை ஊத்தங்கரை சங்கா் கேப் உணவக உரிமையாளா் உமாபதி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com