தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரியில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சாா்பில், நகராட்சி துாய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளா் அஸ்லம் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன், துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் ஆகியோா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை 150 தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் சந்திரா, சுகாதார அலுவலா் மோகனசுந்தரம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் நாராயணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com