கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு யுனிக் கலை அறிவியல் கல்லூரியில், இலவச சட்ட உதவி மையம் சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்
கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு யுனிக் கலை அறிவியல் கல்லூரியில், இலவச சட்ட உதவி மையம் சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளா் க. அருள் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கிருஷ்ணகுமாரி முன்னிலை வகித்தாா். ஊத்தங்கரை நீதிமன்ற வழக்குரைஞா்கள் வஜ்ரவேல், முருகேசன், சதீஷ் மற்றும் இலவச சட்ட உதவி மையத்தின் நிா்வாக உதவியாளா் கோகிலா ஆகியோா் கலந்து கொண்டு பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். இலவச சட்ட உதவி குறித்த துண்டு பிரசுரங்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது. கல்லூரி பேராசிரியா்கள் பலா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com