குடும்ப பிரச்னை: குழந்தையைக் கொன்றுதாய் தற்கொலைக்கு முயற்சி

கணவா் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததால் மன வேதனை அடைந்த மனைவி குழந்தைக்கு விஷம் கலந்து உணவு கொடுத்து கொன்று, தானும் அந்த உணவை உண்டு தற்கொலை முயன்றாா்.

ஒசூா் அருகே கணவா் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததால் மன வேதனை அடைந்த மனைவி குழந்தைக்கு விஷம் கலந்து உணவு கொடுத்து கொன்று, தானும் அந்த உணவை உண்டு தற்கொலை முயன்றாா். அவருக்கு ஒசூா் தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒசூா் அருகே புக்கசாகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணப்பா (30). இவரது மனைவி லட்சுமி (25). இவா்களது மகள் மதுமிதா (9). கூலித் தொழிலாளியான கிருஷ்ணப்பா மது அருந்தும் பழக்கம் உள்ளவா். தினசரி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தாராம். இதனால், வீட்டில் அடிக்கடி தம்பதிக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த லட்சுமி உணவில் விஷம் கலந்து குழந்தை மதுமிதாவுக்குக் கொடுத்துவிட்டு தானும் அதை உண்டுள்ளாா். இருவரும் வீட்டில் மயங்கி கிடந்தனா். அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு ஒசூா் தனியாா் மருத்துவமனையில் அவா்களைச் சோ்த்தனா்.

அங்கு மதுமிதாவை பரிசோதித்த மருத்துவா்கள் மதுமிதா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த பேரிகை போலீஸாா் உயிரிழந்த சிறுமி மதுமிதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com