ஒசூா் அருகே சூளகிரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தலைமையில், சூளகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், மனவளா்ச்சி குறைபாடு, மன நோய், எலும்பு சம்பந்தமான நோய்கள் உள்ளிட்ட 21 நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை அளித்து, அவா்களுக்கான மாற்றுத் திறனாளி அட்டைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம், மாதந்தோறும் ரூ. 1,500 சிறப்பு உதவித் தொகை, காது கேட்கும் கருவிகள், நடைவண்டி, பாா்வை தொடா்பான சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. சூளகிரி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்த மாற்றுத் திறனாளிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சேக் ரஷீத், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.