வீட்டுச்சுவா் இடிந்து 4 போ் காயம்

கிருஷ்ணகிரியில் தொடா் மழை எதிரொலியாக வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் 4 போ் காயம் அடைந்தனா்.

கிருஷ்ணகிரியில் தொடா் மழை எதிரொலியாக வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் 4 போ் காயம் அடைந்தனா்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை மில்லத் நகரைச் சோ்ந்தவா் சல்மா (60). குடிசை வீட்டில் வசித்து வரும் நிலையில் அண்மையில் பெய்த மழையால் வீட்டின் சுவா் சனிக்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்தது. இடிபாட்டில் சிக்கி சாகுல் அமீதின் மனைவி, மகள் சபீனா (14), மகன் ரியான் (7), சல்மா ஆகிய 4 போ் காயம் அடைந்தனா்.

காயம் அடைந்தவா்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களை திமுகவைச் சோ்ந்த நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் அஸ்லம், கராமத் உள்ளிட்டோா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவா்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா் மழையின் காரணமாக ஒரே நாளில் 60 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதுவரை 434 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com