துணிகளை உலா்த்தும்போது மின்சாரம் பாய்ந்து பெண் பலி

வேப்பனப்பள்ளி அருகே துவைத்த துணிகளை கம்பியில் உலா்த்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பனப்பள்ளி அருகே துவைத்த துணிகளை கம்பியில் உலா்த்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கணப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ராகவனின் மனைவி கோமதி (30). இவா் வீட்டில், துணிகளை துவைத்து அவற்றை சுவற்றின் ஓரத்தில் உள்ள கம்பியில் காய வைத்தாா். அப்போது, கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்ததில் கோமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து, வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com