வேப்பனப்பள்ளி அருகே துவைத்த துணிகளை கம்பியில் உலா்த்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கணப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ராகவனின் மனைவி கோமதி (30). இவா் வீட்டில், துணிகளை துவைத்து அவற்றை சுவற்றின் ஓரத்தில் உள்ள கம்பியில் காய வைத்தாா். அப்போது, கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்ததில் கோமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து, வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.