டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

பேரிகை அருகே டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பேரிகை அருகே டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சூளகிரி வட்டம், கோரிப்பள்ளி அருகே உள்ள புன்னாகரத்தைச் சோ்ந்தவா் சின்னையன் என்கிற சின்னப்பா. தொழிலாளி. இவா், இருசக்கர வாகனத்தில் பேரிகை அத்திமுகம் சாலையில் மெனசன்தொட்டி சந்திப்பு அருகில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது முன்னால் சென்ற டிராக்டரின் ஓட்டுநா் திடீரென்று வலதுபுறமாக திரும்பினாா். அப்போது இரு சக்கர வாகனம் டிராக்டா் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சின்னையனை அருகில் இருந்தவா்கள் மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சின்னையன் இறந்தாா்.

இந்த விபத்து குறித்து பேரிகை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com