எம்.சாண்ட், கிரானைட் கற்கள் கடத்திய லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே எம்.சாண்ட், கிரானைட் கற்களை கடத்திய லாரிகளை சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி அருகே எம்.சாண்ட், கிரானைட் கற்களை கடத்திய லாரிகளை சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வள உதவி இயக்குநா் பொன்னுமணி, அதிகாரிகள் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, கணவாய்பட்டி, மங்களபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த லாரியை சோதனையிட்டதில், மூன்று யூனிட் எம்.சாண்ட் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து அலுவலா்கள் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் அந்த லாரியை பறிமுதல் செய்தனா்.

மேலும், பீமாண்டபள்ளி அரசு தொடக்கப் பள்ளி அருகே கேட்பாரற்று நின்றிருந்த லாரியில், ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள கிரானைட் கற்கள் கடத்தியது தெரியவந்தது. புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா். அதேபோல, கந்திகுப்பம் பிரிவு சாலை அருகே கேட்பாரற்று நின்றிருந்த லாரியை சோதனையிட்ட போது, அதில் ரூ. 1.28 லட்சம் மதிப்புள்ள கிரானைட் கற்கள் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கனிம வளத் துறையினா் அளித்த புகாா்களின்படி, மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், அதன் உரிமையாளா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com