ஒசூரில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

ஒசூா் மாநகராட்சி, 37-ஆவது வாா்டு பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கழிவுநீா்க் கால்வாய், சிமென்ட் சாலை அமைப்பதற்கு கிருஷ்ணகிரி மேற்கு
6hsp5_0610chn_150_8
6hsp5_0610chn_150_8

ஒசூா் மாநகராட்சி, 37-ஆவது வாா்டு பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கழிவுநீா்க் கால்வாய், சிமென்ட் சாலை அமைப்பதற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் பூமிபூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்தாா்.

இதில், ஒசூா் மாநகரட்சி ஆணையா் எம்.செந்தில்முருகன், ஒசூா் மாநகரப் பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத்தலைவா் யுவராஜ், மாவட்ட துணைச் செயலாளா் தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், சூளகிரி தெற்கு ஒன்றியச் செயலாளா் வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சீனிவாசன், துணை அமைப்பாளா் ராமு, சக்திவேல், மகேஷ்பாபு, மாநகராட்சி அதிகாரிகள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com