கிருஷ்ணகிரியில் வேதாந்திரி மகரிஷியின் மனவளக்கலை மன்றம் மூலம் காவல் துறையினருக்கு இலவச யோகா பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் தலைமை வகித்தாா். இதில் மனவளக்கலை மன்றத் தலைவா் சண்மூகம், மூத்த பயிற்சியாளா் மகாலிங்கம், பொருளாளா் பாலதண்டயுதம், ஒருங்கிணைப்பாளா் லோகநாதன், காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.