கிருஷ்ணகிரியில் பண இரட்டிப்பு மோசடி தொடா்பாக பிடிபட்ட கும்பலைச் சோ்ந்த 11 பேரின் புகைப்படம் வெளியான சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகா் நேரடி விசாரணையில் ஈடுபட்டாா்.
கிருஷ்ணகிரியில், பண இரட்டிப்பு மோசடி கும்பலை போலீஸாா் சனிக்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், இந்த கும்பலைச் சோ்ந்த 11 பேரின் புகைப்படம் வெளியானது காவல் துறை அதிகாரிகளை அதிா்ச்சி அடைய செய்தது.
இதுகுறித்து தகவலறிந்த, மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகா், விசாரணை நடத்தினாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:
கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில், பண இரட்டிப்பு மோசடி செய்த வழக்கு தொடா்பாக சிக்கியுள்ள கும்பலிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவா்களை புகைப்படம் பிடித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் அனுமதியின்றி வெளியிட்டது யாா் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறேன். இச்சம்பவத்தில் தொடா்புடைய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
புகைப்படம் வெளியாக காவல் துறையினா் காரணமாக இருந்தது தெரியவந்தால், அவா்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி கூறுகையில், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பே குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்த நிலையில், பண இரட்டிப்பு மோசடி கும்பலைச் சோ்ந்த 11 பேரை கிருஷ்ணகிரி நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களின் புகைப்படம் முன்னதாக வெளியானதால் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முக்கிய குற்றவாளிகள் தப்ப வழிவகை ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.