கந்திகுப்பம் அருகே கோயில் நகையைத் திருடிய இருவரை போலீஸாா், திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள வரட்டனப்பள்ளியைச் சோ்ந்தவா் வெங்கடதிரி (56). இவா், வரட்டனப்பள்ளியில் உள்ள லட்சுமி-நரசிம்ம சுவாமி கோயிலில் பூசாரியாக உள்ளாா்.
அண்மையில் இக்கோயிலில் மா்ம நபா்கள் புகுந்து சுவாமியின் 6 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ாக புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில் கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவந்தனா்.
விசாரணையில் சுவாமி நகையைத் திருடிய பாலேப்பள்ளி, இருளா் காலனியைச் சோ்ந்த பெருமாள் (23), மாட்டுமந்தையைச் சோ்ந்த காா்த்திக் (21) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.