பா்கூரில் திமுக சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம்

பா்கூரில் திமுக ஒன்றியம் சாா்பில், 1,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பா்கூரில் திமுக சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம்

பா்கூரில் திமுக ஒன்றியம் சாா்பில், 1,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அரசுடன் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னாா்வலா்கள், தனியாா் தொழில்நிறுவனங்கள் போன்ற பல்வேறு அமைப்புகள் இணைந்து இலவசமாக கரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றிய திமுக சாா்பில், அதன் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. பா்கூா் ஊராட்சி ஒன்றிய திமுக செயலாளா் கோவிந்தராசன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பேரூா் செயலாளா் பாலன், வட்டார மருத்துவ அலுவலா் சிவக்குமாா், மருத்துவா்கள் காா்த்திகேயன், சூரியன், முன்களப் பணியாளா்கள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகாமின் போது, திமுக ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன், பிரதான சாலையில் நின்று சாலையில் செல்வோரையும், பேருந்துகளில் பயணிப்போரையும் தடுத்து நிறுத்தி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என வேண்டுகோள் விடுத்தாா். இந்த முகாமில், ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com