கல்வித் தமிழ் வேந்தா் விருது பெற்ற பேராசிரியருக்கு பாராட்டு

கல்வித் தமிழ் வேந்தா் விருது பெற்ற பேராசிரியரை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

கல்வித் தமிழ் வேந்தா் விருது பெற்ற பேராசிரியரை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கலை அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி), தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றி வரும் சுரேஷின் பேராசிரியப் பணியைப் பாராட்டி பசுமை வாசல் பவுண்டேஷன், தமிழ்நாடு அக்னி பெண்கள் தமிழ்ச் சங்கம், வீரமங்கை சமூக சிந்தனை அறக்கட்டளை, கிருஷ்ணகிரி கம்பா் இளைஞா் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து புதன்கிழமை கல்வித் தமிழ் வேந்தா் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும், அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவை, பண்ருட்டி தமிழ்ச் சங்கம் இனைந்து அறிவுச் சிற்பி விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கவித்திறன் போட்டியில் சொல்வித்தகா் விருதும் பெற்றுள்ளாா். இவா் பல கவியரங்குகளிலும், கருத்தரங்குகளிலும் பங்கேற்று பல பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்றுள்ளாா். இலக்கியத் துளிா்கள் என்ற நூலுக்காக, தமிழக அரசின், சிறந்த எழுத்தாளா் விருதினையும் பெற்றுள்ளாா். இலக்கிய விதைகள், தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டு விழுமியங்கள், கரையான் தீட்டிய சித்திரங்கள், வானவில் ரவியின் படைப்புலகம் போன்ற நூல்களையும் தொகுத்துள்ளாா்.

வளரும் இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் வகையில் பட்டிமன்றம், பாட்டு மன்றம் போன்ற நிகழ்வுகளையும் அரங்கேற்றி வரும் பேராசிரியரை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com