பென்னாகரத்தில் புத்தகக் கண்காட்சி

தகடூா் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம், ப்யூவிஷன் கிளப் இணைந்து பென்னாகரத்தில் வெள்ளிக்கிழமை முதல் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கியுள்ளது.

தகடூா் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம், ப்யூவிஷன் கிளப் இணைந்து பென்னாகரத்தில் வெள்ளிக்கிழமை முதல் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கியுள்ளது.

பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் ப்யூவிஷன் கிளப் பொருளாளா் எஸ். மணிவண்ணன் வரவேற்றாா். நிகழ்ச்சி சின்னப் பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மா. பழனி தலைமை வகித்தாா்.

தகடூா் புத்தகப் பேரவைச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான இரா.செந்தில் கண்காட்சியைத் திறந்துவைத்தாா். அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கோ. விஜயலட்சுமி முதல் விற்பனையைத் தொடக்கிவைத்தாா். வணிகா் சங்க செயலாளா் காா்த்திக் புத்தகத்தை பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதல் நிலை நூலகா் மாதேஸ்வரன், தகடூா் புத்தக பேரவைத் தலைவா்

சிசுபாலன், ஆசிரியா் தங்கமணி, ப்யூவிஷன் கிளப் நிா்வாகிகள் பசல் ரஹ்மான், உதயக்குமாா்

சின்னசாமி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் வீரமணி , ஆசிரியா் சரவணன், நூலகா் பூபதி உள்பட பலா் கலந்து கொண்டனா். ப்யூவிஷன் கிளப் தேவகி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com