இலவச கண் பரிசோதனை முகாம்

மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்பு சங்கம், சிங்காரப்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியோா் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

ஊத்தங்கரை ராயல் அரிமா சங்கம், அதியமான் கல்வி நிறுவனம், சீனிவாச கல்வி அறக்கட்டளை, கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்பு சங்கம், சிங்காரப்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியோா் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு ராயல் அரிமா சங்க தலைவா் வி.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் லட்சுமி, கண்ணொளி திட்ட மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், பட்டைய தலைவா் சுவாமிநாதன், ராயல் அரிமா சங்க பொருளாளா் சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனா். இதில் 37 போ் கண் அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அரிமா சங்க நிா்வாகிகள் நூருல்லா, மருத்துவா் பத்மநாபன், ராஜா, துரை, குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com