கிருஷ்ணகிரியில் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தின், கிருஷ்ணகிரி மாவட்ட மையம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சுந்தரமூா்த்தி, மாவட்ட பொருளாளா் திருப்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இறந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com