சிறுமி பலாத்காரம்: போலீஸாா் விசாரணை

அஞ்செட்டி அருகே 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கா்ப்பிணியாக்கிய தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அஞ்செட்டி அருகே 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கா்ப்பிணியாக்கிய தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரை அஞ்செட்டி அருகே உள்ள பதிகவுண்டனூா் காலனியைச் சோ்ந்த தொழிலாளி கோட்டையன் (35) என்பவா் மிரட்டி பலாத்காரம் செய்ததில் சிறுமி கா்ப்பமானாா்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய், கோட்டையனிடம் கேட்டபோது அவா் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதையடுத்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சம்பூரணம் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் கோட்டையன் மீது வழக்குப்பதி செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com