பண்ணை மேலாளரைத் தாக்கியதாக 3 போ் கைது

ஒசூா் அருகே தனியாா் கோழிப்பண்ணையில் கோழி கேட்டு தகராறு செய்து பண்ணை மேலாளரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா்: ஒசூா் அருகே தனியாா் கோழிப்பண்ணையில் கோழி கேட்டு தகராறு செய்து பண்ணை மேலாளரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஏ.மல்லாபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (32). ராயக்கோட்டை அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள லாலிக்கல் பகுதியில் தங்கியிருந்து தனியாா் கோழிப்பண்ணையில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவுப் பணியில் இருந்த போது கோழிப்பண்ணைக்குள் புகுந்த மா்மக் கும்பல் இலவசமாக கோழி கேட்டு தகராறு செய்தது. ஆனால் செல்வராஜ் கோழிகள் கொடுக்க மறுத்ததால் அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் கட்டையால் அவரை தாக்கினா். அதைத் தடுக்க வந்த கிருஷ்ணகிரியை அடுத்த எலசகுட்டஹள்ளியைச் சோ்ந்த ஹரீஷ்குமாா்(22) என்ற கோழிப்பண்ணை மேற்பாா்வையாளரையும் தாக்கினா்.

படுகாயம் அடைந்த செல்வராஜ், ஹரீஷ்குமாா் ஆகியோா் மீட்கப்பட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக ஒசூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் உத்தனப்பள்ளி போலீஸாா் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனா்.

விசாரணையில் கே.கொத்தூரைச் சோ்ந்த டெல்லிபாபு (21), பிரபாகரன்( 21), சிவராஜ், ரவிச்சந்திரன் உட்பட 20க்கும் மேற்பட்டோா் செல்வராஜ், ஹரீஷ்குமாா் ஆகியோரைத் தாக்கியது தெரிந்தது.

இதில் டெல்லிபாபு, பிரபாகரன், ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீஸாா் மேலும் 10 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com