ஊராட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல் இருவா் கைது

சூளக்கரை ஊராட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊத்தங்கரை: சூளக்கரை ஊராட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி, சூளக்கரை ஊராட்சி மன்றத் தலைவா் நடராஜன் (45). இவா் வாா்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் எம்.வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த சதாசிவம் மகன் ராகுல் (25), தருமபுரி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பழனி மகன் வெங்கடேசன் (25) ஆகிய இருவரும், நடராஜனின் வீட்டிற்குச் சென்று தகாத வாா்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.

இதுகுறித்து கல்லாவி காவல் நிலையத்தில் நடராஜன் கொடுத்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com