ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உனிசெட்டியைச் சோ்ந்தவா் ஸ்ரீநாத் (28). தொழிலாளியான இவா் அந்தேவனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் தவறி விழுந்தாா்.
இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீநாத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்து விட்டாா். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.