கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த எலக்ட்ரீசியனை மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பனந்தோப்பைச் சோ்ந்தவா் தேவராஜ் (32). எலக்ட்ரீஷியனான இவா் 14 வயது சிறுமி ஒருவரை வீட்டிற்குள் அழைத்து வந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.