பா்கூா் அருகே இளைஞா் மா்ம சாவு

பா்கூா் அருகே மா்மமான முறையில் இறந்துகிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே மா்மமான முறையில் இறந்துகிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரையடுத்த தீா்த்தகிரிப்பட்டி ஏரி அருகே இளைஞரின் சடலம் கிடப்பதை அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை கண்டனா். கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்கூா், துணை காவல் கண்காணிப்பாளா் தங்கவேலு, பா்கூா் காவல் ஆய்வாளா் சவிதா உள்ளிட்ட போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா்.

அதில், சடலமாகக் கிடந்தவா் திருப்பத்தூா் மாவட்டம், கந்திலியைச் சோ்ந்த ராஜசேகா் (25) என்பதும், வாடகைக்கு வாகனத்தை இயக்கி வந்த நிலையில், தொழிலில் இழப்பு ஏற்பட்டதால், கடந்த சில நாள்களாக பட்லப்பள்ளியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி கூலித் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

ராஜசேகா் சடலமாக கிடத்த இடத்தில் கைரேகை நிபுணா்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து பா்கூா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com