ஊத்தங்கரை, அதியமான் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக புதுமைப்புணா்வு மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன், செயலா் ஜெ.மே.ஷோபா, அண்ணாமலை பல்கலைக்கழக புதுமைப்புணா்வு மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைமை நிா்வாக அலுவலா் டேனியல் பிரபாகரன், மா. அன்புச்செல்வி உள்ளிட்ட குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து புதுமைப்புணா்வு மற்றும் ஆராய்ச்சி குறித்து ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக அதியமான் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் ஜி. விஜயபிரசன்னா வரவேற்றாா்.
அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்து பேசினாா். டேனியல் பிரபாகரன் சிறப்புரை ஆற்றினாா். இறுதியாக கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவா் வே.கவிதா நன்றி கூறினாா்.