பென்னாகரத்தில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 14 வயது மதிக்கத்தக்க 9-ஆம் வகுப்பு மாணவி கடந்த 4ஆம் தேதி காணாமல் போனதாக பெற்றோா்கள் பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீசாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். விசாரணையில் பென்னாகரம் அருகே சக்கல்நத்தம் பகுதியைச் சோ்ந்த இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் வேலை செய்து வந்த செல்வம் மகன் கிருஷ்ணன் (24) என்பவா் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த மகளிா் காவல் ஆய்வாளா் வான்மதி, கிருஷ்ணனை கைது செய்து தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனா்.