மகாவீா் ஜெயந்தியையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு ஏப்.14-ஆம் தேதி விடுமுறை என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதியின்படி, மகாவீா் ஜெயந்தி தினத்தையொட்டி மதுபானம் விற்பனை இல்லா தினமாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மகாவீா் ஜெயந்தி தினமான ஏப். 14-ஆம் தேதி மதுபானம் விற்பனை இல்லா தினமாகப் பின்பற்றப்படுகிறது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள், மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியாா் உணவகங்கள் அனைத்தும் அன்றைய தினத்தில் மூடப்படும். இந்த உத்தரவை மீறி விற்பனையாளா்கள் மதுக்கடைகளைத் திறந்தாலும், விற்றாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.