கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி வியாபாரிகள் நெகிழிப் பைகளைத் தவிா்த்து வாடிக்கையாளா்களுக்கு துணிப்பையில் பொருள்களை வழங்குமாறு நகராட்சித் தலைவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கிருஷ்ணகிரி நகராட்சி சாா்பில் நெகிழி ஒழிப்பு குறித்து வணிகா்களுடான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் பேசியது:
கிருஷ்ணகிரியில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 40 மைக்ரான் அளவுக்கும் குறைவான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது.
இதுகுறித்து, வணிகா்கள், பொதுமக்களிடம் பல முறை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் வணிகா்கள் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைத் தொடா்ந்து பயன்படுத்தி வருகின்றனா். வா்த்தகா்கள் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.
வாடிக்கையாளா்களுக்கு வணிகா்கள் துணிப் பையில் மட்டுமே பொருள்களை வழங்க வேண்டும். இதைக் கட்டாயமாக பின்பற்றினால் கிருஷ்ணகிரி நகராட்சியை நெகிழி இல்லா நகராட்சியாக உருவாக்க முடியும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் வணிகா்கள், நகராட்சி அலுவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.