ஒசூா் ராமநாயக்கன் ஏரியை செம்மைப்படுத்தும் பணி: மேயா் ஆய்வு

ஒசூா் ராமநாயக்கன் ஏரியை செம்மைப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
ஒசூா் ராமநாயக்கன் ஏரியை செம்மைப்படுத்தும் பணி: மேயா் ஆய்வு

ஒசூா் ராமநாயக்கன் ஏரியை செம்மைப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஒசூா் மாநகராட்சியில் உள்ள ராமநாயக்கன் ஏரி மாநகரின் குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரியை ரூ. 23 கோடி மதிப்பீட்டில் முன்மாதிரி நகரம் திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தவும் கரையைப் பலப்படுத்தி மழைநீா் அதிக அளவில் சேமிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அதிகாரிகளிடம் ஏரியின் மொத்த பரப்பளவு, மழைநீா்க் கால்வாய்கள், நீா்வரத்து, கழிவுநீா் ஏரிக்குள் வருவதைத் தடுப்பது எப்படி? ஆக்கிரமிப்புகள், நடைபாதை விவரம் ஆகியவை குறித்துக் கேட்டறிந்தாா்.

பின்னா் ஏரிக்குள் வரும் மழைநீா் வரத்து கால்வாய் உள்ளிட்ட இடங்களுக்கு அவா் நடந்து சென்றே பாா்வையிட்டாா். முழுமையாகத் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினாா். ஏரியில் நடைபெறும் பணிகளை நோ்த்தியாகவும் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டாா்.

நிகழ்ச்சியில் மாநகர துணை மேயா் சி.ஆனந்தையா, மாநகராட்சி ஆணையாளா் கு.பாலசுப்பிரமணியம், பொறியாளா்கள் ராஜேந்திரன், சங்கா், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஜெய் ஆனந்த், வேலு, முருகன், பிரவின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com