ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றில் முழ்கி தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அஞ்செட்டியை அடுத்த நாட்ராம்பாளையம் அருகே உள்ள பெரியமொட்ரகை பகுதியை சோ்ந்தவா் பிரஜ்வன்(19). இவா் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.காம். (சி.ஏ.) முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் தனது நண்பா்களுடன் கடந்த 24-ஆம் தேதி காவேரிப்பட்டணத்தை அடுத்த சவுளூா் அருகே தென்பெண்ணையாற்றில் குளித்து கொண்டிருந்தாா்.

அப்போது, தண்ணீரில் மூழ்கிய பிரஜ்வனை அங்கிருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com