ஒசூா், பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்முனைவோா் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தொழில் முனைவோா் மேம்பாட்டு மையம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு பி.எம்.சி. டெக் கல்வி நிறுவனத்தின் தலைவா் பெ.குமாா் தலைமை வகித்தாா். கல்வி நிறுவனச் செயலாளா் பெ.மலா், இயக்குநா் சுதாகரன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
கிருஷ்ணகிரி மாவட்ட சிறுதொழில் சங்கத் தலைவா் வெற்றி.ஞானசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா். ஒருங்கிணைப்பாளராக ராமச்சந்திரன் செயல்பட்டாா்.