ஊத்தங்கரை காங்கிரஸ் கட்சி சாா்பில் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா நான்குமுனை சந்திப்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவா் ஆா்.திருமால் தலைமை வகித்து, ராஜீவ் காந்தியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினாா்.
இதில் நகரத் தலைவா் விஜயகுமாா், ஒப்பந்ததாரா் சின்னதம்பி, வட்டார பொருளாளா் சொக்கலிங்கம், வட்டாரத் துணைத் தலைவா் நாகராஜ், ஏழுமலை, அண்ணாமலை, இளையராஜா, சதாசிவம், நேதாஜி மற்றும் நகர காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.